top of page
301bb-bhagavan.jpg

நம்முடைய அறிவின்மை, அஞ்ஞானமாகிய இருளை விலக்க மேன்மேலும் படித்து உபதேசங்களைக் கேட்டு ஞானமாகிய வெளிச்சத்தை வளர்க்க வேண்டும்.

 

இந்நாட்களில் ஆச்சார்யனிடம் உபதேசம் பெறுவதும், ஆத்ம பரமாத்ம ஞானம் பற்றி அறிய ஆர்வம் காட்டுவதும், கேட்டதை உளமாற சிந்திப்பதும் மிகவும் குறைந்து விட்டது.

 

உபதேசம் பெறுதல், சிந்தனம், மற்றவருடன் பேசி தெளிவு பெறுதல் ஆகிய ஞானத்தைப் பெற பெற .. அஞ்ஞானமாகிய இருட்டு தன்னடையே விலகும்.

 

ஆழ்வார் தன் முதல் பாசுரத்திலேயே 

 

பொய்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்

இந்நின்ற நீர்மை இனி யாம்உறாமை ... அடியேன் செய்யும் விண்ணப்பமே.

 

"பொய்யான ஞானம், பொல்லாத நடவடிக்கைகள், அழுக்கு உடல் என்று தடுமாறும் இந்த மனிதவாழ்க்கை இனி எங்களுக்கு வேண்டாம், பிறவாநிலை அருள்வாய்" என்று பிரார்த்திக்கிறார்.

 

(அறிவற்ற, நிலையற்ற தேகமே .. அறிவுள்ள, நிலையான ஆத்மா என்ற) தப்பான புரிதல் 

 

பொல்லா ஒழுக்கம் (துஷ்கர்மா)

அதனால் தேகத்திற்குண்டான சுகத்தைக் கொடுத்துவிட்டு  ஆத்மா சுகப்படுவதாக நினைத்து, தவறான கர்மங்களில் ஈடுபட்டு பல பாவங்கள் சேர காரணாமாகிறது.

 

ஆத்ம ஞானம் இருந்தால்தான் ஆத்மாவின் சுகத்திற்கு முயற்சி செய்வோம்.

 

அதனால் மீண்டும் மீண்டும் பிறக்கும் அழுக்குடம்பு கிடைக்கிறது.

 

இவற்றிலிருந்து விடுபட பெருமானிடம் சரணாகதி அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும் முதல் பாசுரத்திலேயே தெளிவுபடுத்துகிறார்.

ஞானச்சுடர் விளக்கேற்றுவோம்!

 

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ... !!!

 

எந்தத் துன்பத்தையும் விலக்குபவரும் எல்லாவித சம்பத்துக்களையும் தருகிறவரும் உலகின் பேரழகனான ஸ்ரீராமரை பலமுறை வணங்குகிறேன் ... !!!

 

ஶ்ரீராமர் ஆபத்துக்களைப் போக்கி மங்களங்களை அருள்பவர்.

 

வீட்டில் பெருமாளுக்கு ஆராதனம் செய்து கண்டருளப் பண்ணி பிரஸாதத்தை எடுத்துக்கொள்வது நம் பாரத தேசத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் மரபு. 

 

நம்மால் இயன்றவரை ஏழைகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அளிப்பதற்கு உதவ வேண்டும். நம் வீட்டில் உதவிக்கு இருந்தவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து அவர்கள் பாதுகாப்பிற்கு உதவ வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் பிராணிகளுக்கும் உணவிட வேண்டும். 

 

வெளிச்சம் வந்தால்தான் இருள் விலகும். நம் மன உறுதியும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் உடல் உறுதியையும் வளர்த்துக் கொண்டு விட்டால் எந்த நோயும் பாதிக்காது. 

 

ஊடகங்களில் செய்திகளை ஒரு நாளைக்கு ஓரிரு முறை பார்த்து விட்டு நாம் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்த வேண்டும். நாள் முழுவதும் பல்வேறு தகவல்களைப் பார்ப்பதிலையே நேரம் செலவழித்தால் நம் மனநலத்திற்கே ஆபத்து வரும். 

 

பிராணாயாமம், யோகாசனம் உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து ஆரோக்கியமான உணவை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

 

திருக்கோவிவிலூர் திரிவிக்ரமஸ்ஊஆமி ஆஸ்தானத்தில், 

முதல் ஆழ்வார் பொய்கை ஆழ்வார் 

 

வையம் தகளியா,  வார்கடலே நெய்யாக,  வெய்யகதிரோன் விளக்காக, செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை,  இடராழி நீங்குகவேயென்று  

 

அனைத்து தீமைகளும் விலகி நன்மை ஏற்பட வேண்டுமென்று முதல் விளக்கை ஏற்றினார் பாசுரத்தில்.

 

அதற்கு அடுத்த வந்த பூதத்தாழ்வார்

 

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, ,  இன்புருகு சிந்தை இடு திரியா , நன்புருகி ஞானச்சுடர் விளக்கு  ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்தநான் 

 

என்ற ஞான தமிழ் விளக்கை ஏற்றினார் அவருடைய பிரபந்தத்தின் முதல் பாசுரத்தில்.  

 

இந்த இரண்டு ஆழ்வார்கள் ஏற்றிய அகல்விளக்கில் மூன்றாவது ஆழ்வார் பேயாழ்வார் தான் கண்டவற்றை தனது பிரபந்தத்தின் முதல் பாசுரத்தில்

 

திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன், செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன், என்னாழி வண்ணன்பால் இன்று 

 

என்று ஸ்ரீபதியான,  தாயாருடன் கூடிய எம்பெருமான் நாராயணனை கண்டு தரிசனம் பெற்ற வைபத்தை விளக்குகிறார்.  

 

இரண்டு ஆழ்வார்கள் ஏற்றிய அகல்விளக்கின் பயனை மூன்றாவது ஆழ்வார் அருமையாக விளக்கியுள்ளார்.  முதல் ஆழ்வார்கள் மங்களகரமாக விளக்கு ஏற்ற, திவ்யபிரபந்தம் அருமையாக மற்றய ஆழ்வார்களால் அரங்கேற்றப்பட்டது.  

 

அகல்விளக்கு  ஏற்றுவதே, நல்லவை நாட்டில் நடக்க ( தீயவை தானாகவே மறைய) நமது சம்பிரதாயம் வளர்த்த ஆழ்வார்கள் காட்டிய வாழ்க்கை.  

அதைமனதில் கொண்டு நமது மாண்புமிகு  பாரதபிரதமர்    அகல்விளக்கு ஏற்றும்படி அறுவுறுத்திள்ளார். 

 

ஆழ்வார்களின் செந்தமிழ் வாக்கும் அதுவே. ஆழ்வாரோ அவரை " ஞானத்தமிழ் புரிந்தநான்" என்று அரிதியிட்டு தமிழன் என்று ஓங்கி உரைத்துள்ளார்.  தமிழர்கள் அனைவரும் " ஞானத்தமிழ் புரிந்த தமிழன்" ஆழ்வார்கள் வழியில், பாரதபிரதமர் கூறிய அகல்விளக்கை பாரத, உலக நன்மைக்காக ஏற்றுவோம்.

 

यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात्कुरुतेऽर्जुन।
ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा।।

 

Self-Wisdom - In Gita Verse 4.37 As a blazing fire turns firewood to ashes, O Arjuna, so does the fire of knowledge burn to ashes all reactions to material activities.

Krishna tells in this verse that when the person becomes self-realized, wise, his all reactions of knowledge - interpretations, judgements, attachments - will be burned.

விளக்கேற்றினால் வினைகள் தொலையும். ஞானம் என்னும் விளக்கேற்றினால் எந்த ரூபத்தில் இருக்கும் கர்ம வினைகளும் தொலையும். 

 

यथा दीपो निवातस्थो नेंगते सोपमा स्मृता ।

योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः ॥

 

Bhagavad Gita 6.19

 

Meaning:

As a lamp in windless place does not flicker, so the Yogi, whose mind is firm, 

remains steady in the meditation on the self.

 

உறுதியான உள்ளம் நேர்மையான நெஞ்சம் மற்றும் ஒற்றுமையான பண்பாட்டுடன் அனைவரும் ஒன்றுகூடி பெருமானிடம் வேண்டினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

 

அனைவரும் விளக்கின் ஒளியில் பகவானைக் கண்டு அவரிடம் பிரார்த்தித்து நன்மை அடைவோம்.

 

ஜாக்கிரதையாக விளக்கேற்ற வேண்டும். கைகளில் sanitizer தடவிக்கொண்டு விளக்கேற்றக் கூடாது. 

 

सर्वे जनाः सुखिनो भवन्तु।

समस्त सन्मङ्गलानि सन्तु।

bottom of page